000 | : | nam a22 7a 4500 |
008 | : | 170508b ii 000 0 tam d |
245 | : | _ _ |a ஆலிங்கனமூர்த்தி |
300 | : | _ _ |a சைவம் |
340 | : | _ _ |a மணல் கல் |
500 | : | _ _ |a உமையை ஒருகையால் அணைத்தபடி நிற்கும் சிவனார் ஆலிங்கன பெருமான் |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a நான்கு திருக்கைகளுடன் வலது காலை சமபாதத்தில் ஊன்றி இடது காலை சற்று உயரத்தில் இருத்தியபடி (ஊர்த்துவஜானு) நிற்கும் சடையார் ஜடாமகுடம் அணிந்துள்ளார். பின்னிரு கைகளில் வலதில் மழுவும், இடதில் உள்ளது மானாய் இருக்கலாம் (சிதைந்துள்ளது) கொண்டுள்ளார். வலது முன் கை கடியவலம்பிதமாக இடையில் வைத்தவாறும், இடது முன் கை அருகில் நிற்கும் அன்னையின் தோளை அணைத்தவாறும் காட்டப்பட்டுள்ளன. அரையாடை இறைவரின் முப்புரிநூல் வலது கை வழியே உடலின் பின்பக்கம் செல்கிறது. வயிற்றில் உதரபந்தம் (வயிற்றுப் பகுதியில் அணியப்படும் ஒரு வகை அணி. இவ்வணி வயிற்றுப்பகுதியையும், மார்புப் பகுதியையும் பிரித்துக் காட்டும்.) காட்டப்பட்டுள்ளது. கைகளில் கடகவளை, முன்வளை, தோள்வளைகள் அணி செய்திட, கால்களில் வீரக்கழல்கள் விளங்குகின்றன. அருகில் நிற்கும் அன்னையின் முகம் சிதைந்துள்ளது. இடது காலை ஊன்றி வலது காலை சற்றே நகர்த்தி வளைத்து நிற்கிறார். இருகைகளில் இடது கை பல்லவ முத்திரை எனப்படும் எழிற் கையாகவும், வலது கை மலரைப் பிடிக்கும் முத்திரையாகவும் அமைந்துள்ளது. இறைவனைப் போலவே கைவளைகள் காட்டப்பட்டுள்ளன. கணுக்கால் வரை ஆடையணிந்துள்ளார். அம்மையப்பர் இருவருக்கும் கழுத்தணிகளை அறியக்கூடவில்லை. |
653 | : | _ _ |a ஆலிங்கனமூர்த்தி, அணைத்த பிரான், ஆலிங்கன பெருமான, இராஜசிம்மவர்மப் பல்லவன், காஞ்சிபுரம், தொண்டை மண்டலம், பல்லவர் சிற்பம், பல்லவர் கலைப்பாணி, பல்லவர் கலைகள், சிவ வடிவங்கள், சிவன் சிற்பங்கள், சிவன் சிலைகள் |
700 | : | _ _ |a காந்திராஜன் க.த. |
752 | : | _ _ |a முக்தேஸ்வரர் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c காஞ்சிபுரம் |d காஞ்சிபுரம் |f காஞ்சிபுரம் |
905 | : | _ _ |a கி.பி.8-ஆம் நூற்றாண்டு/இராஜசிம்மவர்மப் பல்லவன் |
914 | : | _ _ |a 12.82824139 |
915 | : | _ _ |a 79.70781952 |
995 | : | _ _ |a TVA_SCL_000015 |
barcode | : | TVA_SCL_000015 |
book category | : | கற்சிற்பங்கள் |
Primary File | : |